Thursday, February 6, 2014

விடியலுக்கு காத்திருக்கிறோம்......

விடியலுக்கு காத்திருக்கிறோம்......

நமது ஹிந்து தருமம் மட்டுமல்ல  மீட்டுக்க வேண்டிய நிலையில்,

நமது எதிரியால் தவறாக புனையப்பட்ட "வரலாறு",

அந்நிய மொழி ஊடுருவலாள் சிதைக்கப்பட்ட "தமிழ் மொழி",

அந்நிய மருத்துவ முறையால் மாற்று மருத்துவம் என்று ஒதுக்கப்பட்ட "பாரம்பரிய மருத்துவம்",

நோயற்ற வாழ்வை தரும் நமது "பாரம்பரிய உணவு முறை",

பாரம்பரிய உணவை அடைகாக்கும் "பாரம்பரிய இயற்க்கை வேளாண்மை",

இடம் தெரியாமல் போன போர்க்கலைகள்,

திராவிடர்களாலும் அந்நிய துவேசர்களாலும் பாதிக்கப்பட்ட நமது கலாசாரம் மற்றும் உறவுகள்,

பண மற்றும் பதவி வெறி பிடித்த பிசாசுகளிடம் இருந்து நமது "அரசு",

ஓட்டுக்காக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்து ஆனால் ஏழ்மை நிலையில் இருக்கும் பிற வகுப்பினரை கண்டுகொள்ளாமல் விட்டு வேடிக்கை பார்க்கும் தலித்திய அரசு,

ஓட்டுக்காக சிறுபான்மையினரை மட்டும் தூக்கி பிடித்து பெரும்பான்மையினரை எட்டி உதைத்து எள்ளி நகையாடும் தற்குறி அரசு,

67 வருடங்களுக்கு முன்பு அமரிக்க டாலருக்கு சமமாய் இருந்த "இந்திய ரூபாயின்" மதிப்பு,

பன்னெடுங்காலம் தம் தாய் மண்ணில் சிறப்பாக ஆண்ட, வாழ்ந்த ஈழத்து உறவுகளுக்கு  தமது தனி ஈழத்து உரிமை,

ஒட்டுமொத்த பாரத இளைஞர் கூட்டமும் IT மற்றும் Engineering துறையில் அடகு பட்டு கிடப்பது,

நம் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க அந்நியனை நம்பிக்கிடக்கும் நிலை,

என்று பெரும் பட்டியலே போட்டு விடலாம்... இந்த அவலத்தை யார் கண்ணுறுவது? யார் முன்னெடுத்து மாற்றுவது? அப்பப்பா தலை கிறுகிறுக்கிறது...

No comments:

Post a Comment