Tuesday, June 4, 2013

புற்று நோயை குணமாக்கலாம் - Cancer is Curable - பாகம் 1

 புற்று நோயை குணமாக்கலாம் - Cancer is Curable - பாகம் 1


புற்று நோய்(Cancer) தமிழ் மருத்துவத்தின் பார்வையில்..

புற்றுநோய் என்பது கன்ம நோய்களான குன்மம், மகோதரம், மூலம், பௌத்திரம், பறங்கி, கிரந்தி, கட்டி, கடி, மறு, ஆணி  மற்றும் பிளவை போன்ற நோய்களின் இறுதி கட்டமே. இங்கு குறிப்பிட்டுள்ள நோய்களின் முற்றிய நிலையின் இயல்புகளும் புற்றுநோயின் இயல்புகளும் ஒத்தே இருக்கும். 

புற்றுநோய் வரும் காரணம் இவை மட்டும் தானா என்றால் இல்லை, சில பழக்கவழக்கங்களும் தான்.

சித்தர்களின் பார்வையில் புற்று(ரணம்) உருவாகும் விதம் என்னவென்று பார்ப்போம்:

சொல்லிய அறுவை யாலுஞ் சுகமில்லா முழுகை யாலும் 
வல்லயப் பொறியி னாலும் மருந்தீட்டுக் குணத்தி னாலுங் 
கொல்லுயிர் செய்கை யாலுங் கொடும்பகை மோகத் தாலும்
வல்லபால் பகல ருந்தில்  வலுரணம் பிறக்கு மென்றார்.                     3

துஞ்சவே அசுவ நோவுக் கருந்ததி காசைச் செய்து 
மிஞ்சிய கோயில் பூசை விட்டவர் தமக்கு மாகும் 
அஞ்சவே வேளை தன்னை மதத்துடன் பரித்த பேர்க்குக்
கஞ்சனைப் பிளந்த மாயன் கடுகியே கால னாவார்.                                4

காரிகை உமையாள் பாகன் கலந்தினிநரர்க்கு ரோகம்
சாரிளை நரக மீந்து சரீரங்கள் ளீயச் செய்யும் 
வாரிக்கு ளுதித்த கண்டன் வகைபடப் பாவத் தோர்க்கு 
ஏரிளைப் பாவந் தன்னை இதம்பட ரணமாய்ச் செய்தார்.                      5

செய்திட்ட பாவந் தானுஞ் செப்பபெரு ரோக மாச்சு 
மையிட்ட கண்ணாள் பங்கன் வாகடப் படியே யாக 
பெய்திட்டப் பேசா நூலின் பெருமையை அறிந்து சொல்வோம்
கைதிட்டங் கலந்த ரோகம் கரையினில் அறிந்து சொல்வோம்.       6

பிறந்திடும் ரோகந் தன்னில் பேதமேப் பிரித்துப் பேச 
அறிந்து மேகங்கள் தன்னால் அருரண மிருப தாகும் 
பொருந்திய வாதந் தன்னால் பொருரண மொன்ப தாகும்
மருந்தியல் பித்தம் பத்து வளர்சிலேற்பனம் பன்னிரெண்டே             7

எண்டிசைக் கிரந்தி நோய் யியல்பத்து நூற தாகும்
மண்டிய வகைய றிந்து வயித்தியம் பிரித்துச் சொல்வோம் 
தண்டமிழ் புகல்வோர் முன்னந் தாமுரை செய்த நூலை 
வண்டுறை குழலினாளே மதுரம் போலு ரைத்திட் டோமே                  8 

ஆதாரம்: 

அகத்தியர் ரண நூல்
பாடல் எண்கள்: 3, 4, 5,6, 7 மற்றும் 8


This post is under construction, for more clarity wait for further update ..

குறிப்பு:  

- உலகின் மற்ற பகுதிகளில் மனிதன்  நாகரீகம், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்களை அறியும் முன்பே அவற்றை மட்டுமல்லாது மருத்துவத்திலும் தமிழன் சிறப்புற்று இருந்ததின் சாட்சியாக இந்நூலை எடுத்துக்காட்டாக  கட்டலாம். 

 - இன்று வரையும் கூட நமது நவீன இறக்குமதி மருத்துவத்தில் cancer(புற்று) ஒரு புரியாத புதிர்தான்.