முப்பு இரகசியம்:
முப்பு என்றால் என்ன? மற்றும் மெய்பொருள் விளக்கம்!
முப்பு என்பது முக்குற்றமான வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் என்பனவற்றை ஒழுங்கு படுத்தி இம்மை எனும் நிகழ்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தி, ஆரிருள் எனும் காமம், கோபம், குரோதம், லோபம், மத மற்றும் மாச்சர்யம் என்பனவற்றை அகற்றி, மும்மலங்களான ஆனவம் , கன்மம் மற்றும் மாயை என்பனவற்றை போக்கி, மறுமையான ஆதி அந்த அந்தர்யாமியான பரம்பொருளை அடையவைக்கும் இறைவடிவமாகும். முப்பு என்பது இறைவனே சந்தேகம் வேண்டாம். இந்த இரகசியத்தை நமது தென்னாட்டில் வாழ்ந்த சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் மகான்கள் அறிந்து அவரவர் வழிகளில் நமக்கு விட்டுவைத்து சென்றிருக்கிறார்கள்.
உதரணமாக,
மணிவாசக பெருமான் கீழ்கண்டவாறு முப்பின் ரகசியத்தை சொல்கிறார்.
சிவன் அவன் என் சிந்தையுள்
நின்ற அதனால் அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி
அடுத்து,
திருவள்ளுவ பெருமான் தனது முதல் குறளிலேய அகார ("அ"), உகார ( "உ" ) இரகசியத்தை நமக்கு கூறுகிறார். இந்த மெய்பொருள் விளக்கம் சித்தர்கள்(திருவள்ளுவரும் சித்தர்களுள் மிகவும் முக்கியமானவர்) அருள் இல்லாமல் யாருக்கும் புரியாது, அதனால் தன நமது தமிழ் புலவர்கள் கூட மெய்பொருள் விளக்கம் புரியாமல் ஏதேதோ அர்த்தங்கள் புரிந்துகொண்டு விளக்கம் கூறிவருகிறார்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
சித்தர்கள் அருளால் யாம் உணர்ந்த விளக்கத்தை கீழே குறிபிடுகிறேன்:
அகார ("அ"), உகார ( "உ" ) மற்றும் மகாரம்("ம ") என்பதே அகர முதலான எழுத்தாகும் இம்மூன்றே முப்புவகும் இம்முப்பே அதி மெய்ப்பொருளான இறைவனாகும்.
நிச்சயமாக புள்ளியோ, பிறையோ, கோடோ "அ" முதல் ஆரம்பிக்கும் உயிரேளுதுக்களோ அல்லது வேறு ஏதாவதோ அர்த்தம் கொண்டால் எம்மலோ அல்லது வள்ளுவ பெருந்தகையலோ எதுவும் செய்யமுடியாது.
முதல் குறளே இந்த போடு போடும் போது மீதம் உள்ள குறள் இரகசியங்களை என்ன சொல்லுவது.
அடுத்து,
ஒளவையார் பிராட்டியும் கூட முப்பு பற்றி பாடாமல் இல்லை அவர் பாடிய மூதுரையின் கடவுள் வாழ்த்தே முப்பின் இரகசியமாகும் அருள்பெற்றோருக்கு புரியும்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.
இவ்வாறு சொல்லப்போனால் நமது முன்னோர்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னும் பதினென்மர் வழியில் சென்றால் பார்த்தால் ஆயிரம் ஆயிரம் விளக்கங்கள் தென்படும் அதை பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இப்படிக்கு,
அருள் தேவர் மான சித்தார்
விதியோ மதியோ உள்ளவர்கள் எமது வலைப்பூவை கண்டவுடன் மெய்ப்பொருளை உணர்வர்.