Thursday, February 6, 2014

விடியலுக்கு காத்திருக்கிறோம்......

விடியலுக்கு காத்திருக்கிறோம்......

நமது ஹிந்து தருமம் மட்டுமல்ல  மீட்டுக்க வேண்டிய நிலையில்,

நமது எதிரியால் தவறாக புனையப்பட்ட "வரலாறு",

அந்நிய மொழி ஊடுருவலாள் சிதைக்கப்பட்ட "தமிழ் மொழி",

அந்நிய மருத்துவ முறையால் மாற்று மருத்துவம் என்று ஒதுக்கப்பட்ட "பாரம்பரிய மருத்துவம்",

நோயற்ற வாழ்வை தரும் நமது "பாரம்பரிய உணவு முறை",

பாரம்பரிய உணவை அடைகாக்கும் "பாரம்பரிய இயற்க்கை வேளாண்மை",

இடம் தெரியாமல் போன போர்க்கலைகள்,

திராவிடர்களாலும் அந்நிய துவேசர்களாலும் பாதிக்கப்பட்ட நமது கலாசாரம் மற்றும் உறவுகள்,

பண மற்றும் பதவி வெறி பிடித்த பிசாசுகளிடம் இருந்து நமது "அரசு",

ஓட்டுக்காக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்து ஆனால் ஏழ்மை நிலையில் இருக்கும் பிற வகுப்பினரை கண்டுகொள்ளாமல் விட்டு வேடிக்கை பார்க்கும் தலித்திய அரசு,

ஓட்டுக்காக சிறுபான்மையினரை மட்டும் தூக்கி பிடித்து பெரும்பான்மையினரை எட்டி உதைத்து எள்ளி நகையாடும் தற்குறி அரசு,

67 வருடங்களுக்கு முன்பு அமரிக்க டாலருக்கு சமமாய் இருந்த "இந்திய ரூபாயின்" மதிப்பு,

பன்னெடுங்காலம் தம் தாய் மண்ணில் சிறப்பாக ஆண்ட, வாழ்ந்த ஈழத்து உறவுகளுக்கு  தமது தனி ஈழத்து உரிமை,

ஒட்டுமொத்த பாரத இளைஞர் கூட்டமும் IT மற்றும் Engineering துறையில் அடகு பட்டு கிடப்பது,

நம் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க அந்நியனை நம்பிக்கிடக்கும் நிலை,

என்று பெரும் பட்டியலே போட்டு விடலாம்... இந்த அவலத்தை யார் கண்ணுறுவது? யார் முன்னெடுத்து மாற்றுவது? அப்பப்பா தலை கிறுகிறுக்கிறது...

நமது ராஜ வையித்திய அருளாசிரமத்தின் நோக்கம்:



அந்நிய மற்றும் மேலை நாட்டு மருத்துவ முறையை கையாள்வர்கள் நமது பாரம்பரிய மருத்துவ முறையை மாற்று மருத்துவம் என்று சொல்லும் அவல நிலைக்கு நமது பாரம்பரிய மருத்துவ முறை  தள்ளப்பட்டுள்ளது, இந்த அவலத்தை தகர்த்தெறிவதே முதல் நோக்கமாகும்.

சித்த மருத்துவம், ஆயுள்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், வீட்டு வையிதியம், காட்டு வையிதியம், நாட்டு வயித்தியம், மலை வயித்தியம், பாட்டி வயித்தியம், எலும்பு கட்டு வயித்தியம், வர்ம வயித்தியம் பலவாறு என்று பலவாறு பிரிந்து கிடக்கும் நமது தேசத்தின் பாரமரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து அரசை "Indian System of Medicine" என்று ஒரு ஒருங்கிணைந்த புதிய பரிமாணத்தை உருவாக்கி உலக அளவில் இம்முறையை கொண்டு செல்லல்.

நோய், நோய் வரும் காரணங்கள் மற்றும் அதை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை மேலும் வரும்முன் காக்கும் வழிமுறைகள் குறித்து சாதாரண மக்களும் கூட தெரிந்துக்கொள்ளும் வகையில் ஒரு கட்டமைப்பை நாட்டில்  உருவாக்குதல்

சாதாரண மக்களுக்கும் நமது அறிய மருத்துவ முறைகள் சென்றடைய ஒரு தளம் ஏற்படுத்துவது

நாளும், கோளும், நாடியும் பார்த்து நோயாளிக்கு உரிய மருந்து தருவது

தருமம் தலை காக்கும் என்பதற்கிணங்க வரும் நோயாளிகளை அரச்செயல் புரிய ஆர்வமூட்டி தான, தான்ய தானங்கள் செய்ய ஊக்குவிப்பது

ஆசிரமத்திற்கு வரும் அன்பர்களுக்கு அன்ன தானம் செய்வது

சித்தர் அறிவியல் மற்றும் வாழ்வியல் குறித்து ஆராய்வது மற்றும் அதன் படி வாழ்வது

பாரம்பரிய உணவுமுறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து  நடைமுறைபடுத்துவது

இயற்க்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது மற்றும் மண் மானம் மீட்பது

உணவே மருந்து என்னும் கொள்கையை துலங்க வைப்பது

பத்தியம் காக்க வேண்டிய நோயாளிகளுக்கு அதற்குரிய பத்தியம் சார்ந்த மற்றும் இயற்க்கை முறையில் உற்பத்தியான உணவு பொருட்களை விநியோகித்தல்.

மேற்கண்ட பணிகளுக்காக இயற்க்கை வேளாண்மை செய்வோரை ஊக்குவித்து தக்க விலையில் அவர்களிடம் கொள்முதல் செய்வது

கல்லூரி படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பயன் படும் வகையில் அவர்களின் விடுமுறை நாட்களில் மருத்துவம் சார்ந்த மற்றும் தேவையான மூலிகைப்பொருட்களை சேகாரம் செய்ய வைத்து அதன் மூலம் அவர்களுக்கு பகுதி நேர வருமானம்  ஏற்படுத்துவதோடு மருத்துவம் மற்றும் வாழ்வியல் விழிப்புணர்வு தருதல்.

மேலும் ஏனைய பல நோக்கங்கள் உள்ளன.. வருங்காலங்களில் அவற்றையும் புகுத்தி வெளியிடவுள்ளோம்.




Tuesday, February 4, 2014

நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

Last Supperல் ஏசு தனது சீடர்களுக்கு சூட்சமமாய் திராட்சைரசம்(a Red Matter) மற்றும் அப்பம்(A White Matter) என்று அவர் கூறிய மெய்ப்பொருளின் அர்த்தம் சொல்ல முடியுமா?அது ஒன்று போதும் அவர் பெரிய சிவனடியார் என்பதற்க்கும் ஒரு தமிழ் சித்தரிடம் பாடம் பயின்றவர் என்பதர்க்கும்..

எம்பெருமான் சிவ ரூபதிற்க்கு எண்ணற்ற வேதாந்தவிளக்கங்கள் உண்டு பல மகான்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்த விளக்கத்தை சித்தர்கள் மறைப்பொருளாக அழகாக பரிபாஷையில் அண்டக்கல் என்றும், ஆணைக்கால் என்றும், ஓங்காரம் என்றும், தளசம் பிள்ளை மண்டை ஓடு என்றும், சிவனார் கபாலம் என்றும், சாகா மூலி என்றும், காலியென்றும், அட்சய பாத்திரம் என்றும், கங்கை யென்றும், உப்பு என்றும், முப்பு என்றும் சொல்லியுள்ளார்கள்... இதை அறிந்தவன் இறப்பை வென்றுவிடுவான் ஏசுவை போல...

ஏசு என்ற ஒருவர் செய்த சித்து வேலைகளை வைத்தே ஒரு மதத்தை உருவாக்கி விட்டார்கள் இந்த பாவிகள், அதை தொடர எண்ணற்ற ஆட்டு மந்தைகள்(சரியாக தான் விவிலியத்திலும் சொல்லியிருக்கிறது செம்மாறியாதுகள் என்று இவர்களை) அவர்கள் பின்னால்.. இங்கு நம்நாட்டில் ஏசுவைப்போல ஆயிரக்கணக்கான மகான்களும், சித்தர்களும் வாழ்ந்திருப்பது இவர்கள் பாவிகளானதால் இவர்களுக்கு புலப்படாது போலும்..

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் வாழும் கிறித்துவ பயித்தியங்கள், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி அலையும் அறிவாளிகள்..

அவர்களின் மதத்தில் சொல்லுவதை போல அவர்கள் பாவிகள் தாம், சந்தேகம் இல்லை... சித்தர் பூமியில் பிறந்து அவர்களை அறியாமல் எங்கோ சென்று வழி தவறி மாண்டு போவது அவர்கள் விதியானால் பாவிகள் தானே...

அவர்களை பின்தொடர்ந்து நானும் ரவுடி தான் என்று நாய் சேகர் பாணியில் 600 வருடங்களுக்கு பின் வந்தவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது...

விடயம் என்னவென்றால் அவர்கள் நமது ஹிந்து தருமம் இருக்கும் நிலையை அடைய குறைந்தது ஒரு யுகம் ஆகிவிடும்... இன்னும் அவர்களுக்கு ஞானம், சீவ காருண்யம், தவம், யோகம், சித்‌தி, முக்தி, மோக்ஷம் குறித்து ஒன்றும் விளங்காது. இது குறித்து தமக்கு தெரியாது என்பதால் பல காரணங்கள் சொல்லி எளிதில் புறக்கணிப்பார்கள். என்னை பொருத்தவரை இந்த ஆபிரகாமிய மதங்கள் முற்றுபெறாத துவக்க நிலையில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர்.