Wednesday, March 20, 2013

முப்பு இரகசியம்(Secret of Muppu / philosopher's stone):


முப்பு இரகசியம்:





முப்பு என்றால் என்ன? மற்றும் மெய்பொருள் விளக்கம்!

முப்பு என்பது முக்குற்றமான வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் என்பனவற்றை ஒழுங்கு படுத்தி இம்மை எனும் நிகழ்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தி, ஆரிருள் எனும் காமம், கோபம், குரோதம், லோபம், மத  மற்றும்  மாச்சர்யம்  என்பனவற்றை அகற்றி, மும்மலங்களான ஆனவம் , கன்மம் மற்றும் மாயை என்பனவற்றை போக்கி, மறுமையான ஆதி அந்த அந்தர்யாமியான பரம்பொருளை அடையவைக்கும் இறைவடிவமாகும். முப்பு என்பது இறைவனே சந்தேகம் வேண்டாம். இந்த இரகசியத்தை நமது தென்னாட்டில் வாழ்ந்த சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் மகான்கள் அறிந்து அவரவர் வழிகளில் நமக்கு விட்டுவைத்து சென்றிருக்கிறார்கள். 

உதரணமாக,


மணிவாசக பெருமான் கீழ்கண்டவாறு முப்பின் ரகசியத்தை சொல்கிறார்.




சிவன் அவன் என் சிந்தையுள் 
நின்ற அதனால் அவன் அருளாலே 
அவன் தாள் வணங்கி 

அடுத்து,

திருவள்ளுவ பெருமான் தனது முதல் குறளிலேய அகார ("அ"), உகார ( "உ" ) இரகசியத்தை நமக்கு கூறுகிறார். இந்த மெய்பொருள் விளக்கம் சித்தர்கள்(திருவள்ளுவரும் சித்தர்களுள் மிகவும் முக்கியமானவர்) அருள் இல்லாமல் யாருக்கும் புரியாது, அதனால் தன நமது தமிழ் புலவர்கள் கூட மெய்பொருள் விளக்கம் புரியாமல் ஏதேதோ அர்த்தங்கள் புரிந்துகொண்டு விளக்கம் கூறிவருகிறார்கள். 




அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு

சித்தர்கள் அருளால் யாம் உணர்ந்த விளக்கத்தை கீழே குறிபிடுகிறேன்:


அகார ("அ"), உகார ( "உ" ) மற்றும் மகாரம்("ம ") என்பதே அகர முதலான எழுத்தாகும் இம்மூன்றே முப்புவகும் இம்முப்பே அதி மெய்ப்பொருளான இறைவனாகும்.


நிச்சயமாக புள்ளியோ, பிறையோ, கோடோ "அ" முதல் ஆரம்பிக்கும் உயிரேளுதுக்களோ அல்லது வேறு ஏதாவதோ அர்த்தம் கொண்டால் எம்மலோ அல்லது வள்ளுவ பெருந்தகையலோ எதுவும் செய்யமுடியாது.
முதல் குறளே இந்த போடு போடும் போது மீதம் உள்ள குறள் இரகசியங்களை என்ன சொல்லுவது.


அடுத்து,


ஒளவையார் பிராட்டியும் கூட முப்பு பற்றி பாடாமல் இல்லை அவர் பாடிய மூதுரையின் கடவுள் வாழ்த்தே முப்பின் இரகசியமாகும் அருள்பெற்றோருக்கு புரியும்.




வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.

இவ்வாறு சொல்லப்போனால் நமது முன்னோர்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.



இன்னும் பதினென்மர் வழியில் சென்றால் பார்த்தால் ஆயிரம் ஆயிரம் விளக்கங்கள் தென்படும் அதை பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இப்படிக்கு,


அருள் தேவர் மான சித்தார் 




விதியோ மதியோ உள்ளவர்கள் எமது வலைப்பூவை கண்டவுடன் மெய்ப்பொருளை உணர்வர்.




10 comments:

  1. “அகர முதல” குறளுக்கு மிகச்சரியான விளக்கம் இது என்று எனக்குப் படுகிறது. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய எவரும் இந்த உட்பொருளை உணரவில்லை என்பது வருத்தத்துக்குரியது. முக்கியமாக திருவள்ளுவர் மெய்ப்பொருளை உணர்ந்த சித்தர் என்பது பலரும் அறியாத ஒன்று. மிகவும் உயர்ந்த கருத்துக்களை எளிமையாக கூறியுள்ளீர்கள். தங்களது மக்கள் தொண்டு மேன்மேலும் தொடர எமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லாம் பெரியோர்களின் அசீர்வதலும், சித்தர்களின் அருளாலும் நடக்கிறது, உண்மை எப்படியானாலும் ஒருநாள் வெளிவந்தே தீரும், இது அதற்குரிய தருணம் தான்.

    ReplyDelete
  3. ஆஹா அருமை!
    இன்னும் எத்தனையோ செய்யுள்களை நமது பெரியோர்கள் விட்டு சென்றுள்ளனரே, அவைகளை தொட்டால் என்னவெல்லாம் கிட்டுமோ!

    ReplyDelete
  4. முப்பு என்பது மேலே சொன்னதுபோல மிகைப்படுத்தி பார்க்கவேண்டாம்... 2000 வருடங்களுக்கு முன்பு தங்கச்சுரங்கங்கள் குடையாது அப்போது உயர்ந்த உலோகமான தங்கம் செய்வது தேவைப்பட்டது.. இன்று TATA GOLDPLUS கடைக்குபோனால் 24 கேரட் தங்கம் வாங்கலாம் விசயத்திற்க்கு வருவோம் இங்கு தங்கம் செய்வதற்க்கு முப்பு கிடையாது முப்பு 3 வகைப்படும் மணித உடலை நோய் இல்லாமல் காப்பதற்க்கு. இரண்டாவது வகை பாசானங்களை கட்டுவதற்க்கு இரசத்தை கட்டுவதற்க்கு 3ஆம் வகை தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றும் இரவாதம்....முப்பு என்பது எழிய விசையம்தான் சொல்லப்போனால் 15 நாட்களில் 3ஆம் வகை முப்பையும் செய்து விடலாம்.. கொஞ்சம் சிந்தித்தால் போதும்.

    ReplyDelete
  5. முப்பு என்பது மேலே சொன்னதுபோல மிகைப்படுத்தி பார்க்கவேண்டாம்... 2000 வருடங்களுக்கு முன்பு தங்கச்சுரங்கங்கள் குடையாது அப்போது உயர்ந்த உலோகமான தங்கம் செய்வது தேவைப்பட்டது.. இன்று TATA GOLDPLUS கடைக்குபோனால் 24 கேரட் தங்கம் வாங்கலாம் விசயத்திற்க்கு வருவோம் இங்கு தங்கம் செய்வதற்க்கு முப்பு கிடையாது முப்பு 3 வகைப்படும் மணித உடலை நோய் இல்லாமல் காப்பதற்க்கு. இரண்டாவது வகை பாசானங்களை கட்டுவதற்க்கு இரசத்தை கட்டுவதற்க்கு 3ஆம் வகை தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றும் இரவாதம்....முப்பு என்பது எழிய விசையம்தான் சொல்லப்போனால் 15 நாட்களில் 3ஆம் வகை முப்பையும் செய்து விடலாம்.. கொஞ்சம் சிந்தித்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முப்பு செய்து விட்டீர்களா...3 ம் ஒன்று.....

      Delete
  6. Mupu books practical. With explanation. Kindly guide me. Agathiyar paribhasai with detailed explanation

    ReplyDelete
  7. What is a slot machine? - JTM Hub
    What is a slot machine? — Play games like Jackpot, 충청남도 출장마사지 Wild West, Double 포천 출장안마 Dragon, 동두천 출장샵 Wild West, and more! 군산 출장마사지 Play for 거제 출장안마 fun or real money at JRM.J.R.P..

    ReplyDelete